Wednesday, August 25, 2004

தவிப்பு !!

இன்னும் காணலியே
- பதைபதைக்குது மனசு ..
என்ன ஆச்சோ ஏது ஆச்சோ?
இப்ப வருவானோ பின்ன எப்ப வருவானோ ?
- அடிச்சிக்குது மனசு !
பொம்பள ஜென்மத்துக்கு மட்டுமே கிடைச்ச வரமா??

பயத்தோட காத்திருக்கேன்,
நாலு நாள் தாண்டியும் இன்னும் வராத
மூணு நாள் அவஸ்தைக்காக !!

Tuesday, August 17, 2004

கொடுப்பினை!

கோடி வீட்டு ரங்கம்மா
கையால சாப்பிட கொடுத்து வச்சிருக்கனும் -
முதல் நாளே காசு..

Monday, August 16, 2004

கவிதை!!

என் முழு பக்க கவிைதகள்
தோற்று போனது
என்னவளின் ஒற்றை வரி கவிதையில் - புன்னகை..

கனவு

ஜனவரி 22 '04 நன்றாய் ஓர் கனவு - எண்ணங்களில் நிறைந்து இருக்கிறாய் போலும்.. நேற்றைக்கு கனவுகளிளும் நிறைந்திருந்தாய்...கனவில் கூட நம் சந்திப்பு , நீண்ட நாட்களுக்கு பின் நடப்பதாய் தான் இருக்கிறது..கனவோடையில் ஒடிய நினைவுகள்.. - நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த அதே ஆடையில் உன்னை பார்க்கிற நான் , எண்ணி பார்த்து கொள்கிறேன் , அந்த நீண்ட நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பை.. மனதில் , ஆயிரம் ரோஜாக்கள் சிரித்தது , நீ என்னை நோக்கி நடந்து வரும் பொழுது , சின்னதாய், ஒரு ஓரமாய் கோப முள்ளும் !
எங்கெங்கோ பயணித்து விட்டு மீண்டும் திரும்பினேன் என் கூட்டிற்கு..எழுந்தவுடன் மீண்டும் எண்ணி பார்த்து கொள்கிறேன்.. உன் நினைவுகளால் நிறைந்த கனவை... மீண்டும் வருவாய் - கனவில் ஆவது என்ற நம்பிக்கையுடன் தினசரி வாழ்க்கையில் நுழைகிறேன், கனவுகளால் நிறைந்திருக்கும் நினைவுகளை சுமந்து கொன்டு.. நன்றாகத்தான் இருக்கிறது , கனவுகளில் வாழ்வதும்..