Monday, August 16, 2004

கனவு

ஜனவரி 22 '04 நன்றாய் ஓர் கனவு - எண்ணங்களில் நிறைந்து இருக்கிறாய் போலும்.. நேற்றைக்கு கனவுகளிளும் நிறைந்திருந்தாய்...கனவில் கூட நம் சந்திப்பு , நீண்ட நாட்களுக்கு பின் நடப்பதாய் தான் இருக்கிறது..கனவோடையில் ஒடிய நினைவுகள்.. - நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த அதே ஆடையில் உன்னை பார்க்கிற நான் , எண்ணி பார்த்து கொள்கிறேன் , அந்த நீண்ட நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பை.. மனதில் , ஆயிரம் ரோஜாக்கள் சிரித்தது , நீ என்னை நோக்கி நடந்து வரும் பொழுது , சின்னதாய், ஒரு ஓரமாய் கோப முள்ளும் !
எங்கெங்கோ பயணித்து விட்டு மீண்டும் திரும்பினேன் என் கூட்டிற்கு..எழுந்தவுடன் மீண்டும் எண்ணி பார்த்து கொள்கிறேன்.. உன் நினைவுகளால் நிறைந்த கனவை... மீண்டும் வருவாய் - கனவில் ஆவது என்ற நம்பிக்கையுடன் தினசரி வாழ்க்கையில் நுழைகிறேன், கனவுகளால் நிறைந்திருக்கும் நினைவுகளை சுமந்து கொன்டு.. நன்றாகத்தான் இருக்கிறது , கனவுகளில் வாழ்வதும்..